என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் சுட்டதில்  2 போலீஸ்காரர்கள் பலி
    X

    சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் சுட்டதில் 2 போலீஸ்காரர்கள் பலி

    • போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் ராஜேஷ்சிங்ராஜ்புத் மற்றும் அணில்குமார்சாம்ராட் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மராட்டிய மாநில எல்லையையொட்டி உள்ள போலீஸ் நிலைய முகாமுக்கு சென்று கொண்டு இருந்தனர்.அவர்கள் துப்பாக்கி எதுவும் எடுத்துசெல்லவில்லை.

    அப்போது நக்சலைட்டு கும்பல் போலீஸ்காரர்களை சுற்றி வளைத்தது.இதனால் போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . அவர்கள் சுதாரிப்பதற்குள் நக்சலைட்டுகள் 2 பேரையும் நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இதில் சம்பவ இடத்திலேயே ஒரு போலீஸ்காரர் உயிர் இழந்தார்.மற்றொருவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார்.

    போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. தப்பி ஓடிய நக்சலைட்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×