என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காத பிரஜ்வல் ரேவண்ணா
    X

    அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காத பிரஜ்வல் ரேவண்ணா

    பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை சிறப்பு புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா தனக்கு சோர்வாக இருப்பதாகவும், தூங்க வேண்டும் என கூறி சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அத்துடன் அதிகாரிகள் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் உள்ள 2 செல்போன்களை கேட்டுள்ளனர். ஆனால் தன்னிடம் இருந்த ஒரு செல்போனை மட்டும் கொடுத்துள்ளார். இன்னொரு செல்போன் பற்றி அதிகாரிகள் கேட்ட போது, அது எனது உதவியாளர் செல்போன் என கூறியுள்ளார்.

    இதையடுத்து அதிகாரிகள், ஒலேநரசிப்புரா போலீசில் பாலியல் புகார் அளித்த பெண் பற்றி பிரஜ்வல் ரேவண்ணாவிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த பெண் யார் என்று எனக்கு தெரியாது. எங்கள் வீட்டில் நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்றார்.

    இவ்வாறு பிரஜ்வல் ரேவண்ணா அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    Next Story
    ×