search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிரத்தில் உள்ள கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான தங்க கலசம் வழங்கிய ஒடிசா மந்திரி
    X

    மகாராஷ்டிரத்தில் உள்ள கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான தங்க கலசம் வழங்கிய ஒடிசா மந்திரி

    • ஒடிசா மாநிலத்தில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மந்திரி சபையில் பணக்கார மந்திரியாக நாபா கிஷோர் தாஸ் இருந்து வருகிறார்.
    • தங்க கலசம் 1.7 கிலோ எடை கொண்டது.

    அகமது நகர்:

    மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சனி சிக்கானப்பூர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிஜூ ஜனதா தள கட்சி மூத்த தலைவரும், ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரியுமாக நாபா கிஷோர்தாஸ் தனது குடும்பத்துடன் சிறப்பு அபிஷேகம் செய்தார். அப்போது அவர் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க கலசத்தை அவர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த தங்க கலசம் 1.7 கிலோ எடை கொண்டது. மேலும் 5 கிலோ வெள்ளியையும் அவர் வழங்கினார்.

    மந்திரி நாபாகிஷோர் தாஸ் குடும்பத்துடன் பங்கேற்ற சிறப்பு பூஜை சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மந்திரி சபையில் பணக்கார மந்திரியாக நாபா கிஷோர் தாஸ் இருந்து வருகிறார். இவருக்கு ரூ.1.14 கோடி மதிப்பிலான சொகுசு கார் உள்ளது. இவரது மனைவி பெயரில் 75 வாகனங்கள் உள்ளது. இதன் மதிப்பு ரூ.15 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×