என் மலர்

    இந்தியா

    தொங்கு பாலம் விபத்தில் 7 மாத கர்ப்பிணி கண்முன் இறந்ததை பார்த்து உடைந்து போனேன்- டீக்கடைக்காரர் பேட்டி
    X

    தொங்கு பாலம் விபத்தில் 7 மாத கர்ப்பிணி கண்முன் இறந்ததை பார்த்து உடைந்து போனேன்- டீக்கடைக்காரர் பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என் கண் முன்னால் பாலத்தில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
    • என் முன் மரண ஓலத்துடன் பலர் இறந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவே இல்லை.

    அகமதாபாத்:

    குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 142 பேர் இறந்து விட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த டீ வியாபாரி கூறியதாவது.-

    நான் இந்த பகுதியில் டீ விற்று வருகிறேன். நேற்றும் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது தொங்கு பாலம் திடீரென அறுந்து விழுந்தது. எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்து விட்டது.

    என் கண் முன்னால் பாலத்தில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். எங்கு பார்த்தாலும் பலர் தண்ணீரில் மூழ்கியதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

    7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கதறியபடி உயிர் விட்டதை பார்த்ததும் நான் மனம் உடைந்து போய் விட்டேன். நானும் என்னால் முடிந்த அளவு உதவி செய்ய முயற்சி செய்தேன். மீட்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல உதவினேன். ஆனாலும் என் முன் மரண ஓலத்துடன் பலர் இறந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகமதாபாத்தை சேர்ந்த விஜய் கோஸ்சுவாமி என்ப வர் கூறியதாவது:-

    நான் எனது குடும்பத்துடன் தொங்கு பாலத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சில இளைஞர்கள் தொங்கு பாலத்தை பிடித்து ஆட்டினார்கள். இதனால் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை அறிந்த நான் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு திரும்பி வந்து விட்டேன்.

    அந்த சமயம் நான் நினைத்தபடியே பாலம் அறுந்து விழுந்து விட்டது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இளைஞர்கள் பாலத்தை பிடித்து இழுத்துக்கொண்டு இருப்பது குறித்து நான் அங்கு டிக்கெட் விற்று கொண்டிருந்தவர்களிடம் முன்னமே கூறினேன்.

    ஆனால் அவர்கள் அதுபற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் டிக்கெட் கொடுப்பதில் தான் மும்முரமாக இருந்தனர். நான் சொன்னதை அவர்கள் காது கொடுத்து கேட்டு நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×