search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குரங்கு அம்மை பாதிப்பு - கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை
    X

    குரங்கு அம்மை நோய்

    குரங்கு அம்மை பாதிப்பு - கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை

    • உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 413 பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது.
    • உலக நாடுகளை மிரட்டி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 413 பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி உள்ளது.

    இந்தியாவில் குரங்கு அம்மை நுழையாமல் இருந்த நிலையில், நேற்று கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், 5 மாவட்டங்களில் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருடன் ஒரே விமானத்தில் வந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

    Next Story
    ×