என் மலர்
இந்தியா

கொல்லத்தில் முழு டிஜிட்டல் நீதிமன்றம்- 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்
- கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி திறந்துவைத்த நிலையில் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
- ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை(20-ந்தேதி) முதல் செயல்பட தொடங்குகிறது. நாட்டிலேயே முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி திறந்துவைத்தநிலையில் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்த நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம். ஜாமின் பெற கட்சிக்காரர்கள் மற்றும் ஜாமின்தாரர்கள் உள்ளிட்டவர்கள் ஆஜராக தேவையில்லை. அவர்கள் ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.
Next Story






