என் மலர்tooltip icon

    இந்தியா

    திருவனந்தபுரத்தில் புகார்களை விசாரிக்க சென்ற பெண் கலால் அதிகாரி விபத்தில் பலி
    X

    திருவனந்தபுரத்தில் புகார்களை விசாரிக்க சென்ற பெண் கலால் அதிகாரி விபத்தில் பலி

    • ஷானிதா சில மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக வந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்துள்ளார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருமலை வேட்ட முக்குலட்சுமி நகரை சேர்ந்தவர் ஷானிதா. கலால்துறை அதிகாரியான இவர் திருவனந்தபுரத்தல் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்தார்.

    இந்தநிலையில் துறை தொடர்பாக தனக்கு வந்த ரகசிய புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சம்பவத்தன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஷானிதா சென்றிருக்கிறார். பட்டூர் பொது மருத்துவமனை சாலையில் சென்ற போது, அவரது இருசக்கர வாகனம் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதனால் ஷானிதா சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், அவரின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்னி ஷானிதா பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷானிதா சில மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக வந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி இறந்திருக்கிறார்.

    ஆகவே அவர் விபத்தில் தான் இறந்தாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஷானிதாவுக்கு நசீர் என்ற கணவரும், முகம்மது பகத் என்ற மகனும், பைகா பாத்திமா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×