என் மலர்tooltip icon

    இந்தியா

    200 முறை நாய் கடித்ததில் 3 வயது சிறுமி பலி
    X

    200 முறை நாய் கடித்ததில் 3 வயது சிறுமி பலி

    • பாண்டியா கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடி கொண்டிருந்தார்.
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி சிபி கஞ்ச் பகுதியில் உள்ள பாண்டியா கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது கூட்டமாக வந்த நாய்கள், அந்த சிறுமியை கடித்தன. இதில் படுகாயம் அடைந்த சிறுமி அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாயை விரட்டிவிட்டு சிறுமியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமியின் உடலில் 200-க்கும் மேற்பட்ட நாய் கடி இருந்ததாக தெரிவித்தனர்.

    நாய் கடித்து 3 வயது சிறுமி கொடூரமாக இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×