search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2500 வெள்ள நிவாரணத்தை அறிவித்தார் ஜெகன்மோகன் ரெட்டி
    X

    ரேனிகுண்டா விமான நிலையத்தில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு மந்திரி ரோஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2500 வெள்ள நிவாரணத்தை அறிவித்தார் ஜெகன்மோகன் ரெட்டி

    • முதல்-மந்திரி ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
    • சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக கனமழை பெய்தது.

    இதில் நெல்லூர், திருப்பதி, கிழக்கு கோதாவரி, பிரகாசம், என்.டி.ஆர். உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்காணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது.

    இந்நிலையில், முதல்-மந்திரி ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும்.

    மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 நிவாரண தொகை உடனடியாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×