search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதம் மாற்ற முயன்றதாக கிறிஸ்தவ போதகர் கைது
    X

    மதம் மாற்ற முயன்றதாக கிறிஸ்தவ போதகர் கைது

    • வாரணாசியில் சிலர் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.
    • கிறிஸ்தவ மத போதகர் ஒருவரும், 2 பெண்களும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிலர் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வாரணாசி அருகே உள்ள பல்வாகி கிராமத்தில் அதிகாரிகள் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கிறிஸ்தவ மத போதகர் ஒருவரும், 2 பெண்களும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் துண்டு பிரசுரங்கள் கொடுத்து இந்துக்களிடம் பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து அந்த கிறிஸ்தவ போதகர் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×