என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சாக்லேட் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
- பள்ளிக்கு சாக்லேட் எடுத்துச்சென்ற சந்தீப் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிட்டார்.
- தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வரும் வழியிலேயே சந்தீப் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பின்னி வாரி வீதியை சேர்ந்தவர் கன்வர் சிங். இவர் ஆஸ்திரேலியாவில் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா சிங். தம்பதியின் 2-வது மகன் சந்தீப் (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
கன்வர் சிங் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அங்கிருந்து பிள்ளைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டுகளை வாங்கி வந்தார்.
நேற்று முன் தினம் காலை பிள்ளைகள் பள்ளிக்கு சென்றபோது கீதா சிங் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பினார்.
பள்ளிக்கு சாக்லேட் எடுத்துச்சென்ற சந்தீப் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிட்டார். அப்போது திடீரென சாக்லேட் அவனது தொண்டைக்குள் சிக்கியது.
இதனால் சந்தீப்புக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனைக் கண்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகிகள் சந்தீப்பை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அதற்குள் சந்தீப்பை பரிசோதித்த டாக்டர்கள் தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வரும் வழியிலேயே சந்தீப் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வாரங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்