search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரக்ஞானந்தாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிரக்ஞானந்தாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

    • இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் பெறுவர்.
    • இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு 100 ஆண்டுகள் ஆகி விட்டன.

    மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுடன் அவரது பெற்றோர்களும் சென்றிருந்தனர்.

    பிரக்ஞானந்தாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர்,"நான் அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார். 16 வயதிலேயே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து காட்டியிருக்கிறார். பல்வேறு இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் பெறுவர். செஸ் போட்டி இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு 100 ஆண்டுகள் ஆகி விட்டன. தாமதம் ஆகிவிட்ட நிலையிலும், அது வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது," என்று தெரிவித்தார்.

    இதே நிகழ்வில் பேசிய பிரக்ஞானந்தா, "இத்தகைய ஆதரவு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், இவை எங்களை மேலும் அதிக கடினமாக உழைத்து எதிர்கால போட்டிகளில் சிறப்பாக விளையாடி, நாட்டுக்கு பெருமை பெற்றுக் கொடுக்க ஊக்குவிக்கும்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×