என் மலர்
இந்தியா

தண்டவாளத்தை சரி செய்தபோது டவர் வேகன் மோதி 4 ஊழியர்கள் பலி- டிரைவர் கைது
- லாசல்கான் மற்றும் உகான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- டவர் வேகன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், லாசல்கான் அருகே ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிக்கான டவர் வேகன் வாகனம் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஊழியர்கள் மீது டவர் வேகன் மோதியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
டவர் வேகன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவரை சக ஊழியர்கள் தாக்கினர்.
லாசல்கான் மற்றும் உகான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் அதிகாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிராக்மேன்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, டவர் வேகன் தவறான பாதையில் வந்து அவர்கள் மீது மோதியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
Next Story






