என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் படுகாயம்
Byமாலை மலர்12 April 2022 9:51 AM GMT (Updated: 12 April 2022 9:51 AM GMT)
திருப்பதியில் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் மற்றும் கோதண்ட ராமர் கோவில் சத்திரம் ஆகிய 3 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது. கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
இதனால் கடந்த சனி, ஞாயிறு, இன்று, நாளை ஆகிய 4 நாட்களுக்கான இலவச தரிசனங்கள் டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டு விட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டது.
தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் 3 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
3 நாட்களுக்கு பிறகு இலவச தரிசன கவுண்டர் இன்று திறக்கப்பட்டு டோக்கன் விநியோகிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பக்தர்கள் டிக்கெட் வாங்க குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் கூட்டத்தை கலைத்தனர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் மற்றும் கோதண்ட ராமர் கோவில் சத்திரம் ஆகிய 3 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது. கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
இதனால் கடந்த சனி, ஞாயிறு, இன்று, நாளை ஆகிய 4 நாட்களுக்கான இலவச தரிசனங்கள் டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டு விட்டது. இதனால் கடந்த சனிக்கிழமை டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டது.
தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் 3 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
3 நாட்களுக்கு பிறகு இலவச தரிசன கவுண்டர் இன்று திறக்கப்பட்டு டோக்கன் விநியோகிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பக்தர்கள் டிக்கெட் வாங்க குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் கூட்டத்தை கலைத்தனர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X