என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்று விட்டேன்: நித்யானந்தா அறிவிப்பால் பரபரப்பு
Byமாலை மலர்18 Aug 2021 9:27 AM GMT (Updated: 18 Aug 2021 9:27 AM GMT)
மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார்.
புதுடெல்லி:
கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவானார்.
அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் கைது நடவடிக்கைகள் முடங்கி உள்ளது.
இதை பயன்படுத்தி நித்யானந்தா சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். இந்நிலையில் 293-வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்று கொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளதாகவும் அந்த பதிவுகளில் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் தனது பெயரை 293-வது ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் மாற்றி கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தில் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 2019-ம் ஆண்டு அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவானார்.
அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் கைது நடவடிக்கைகள் முடங்கி உள்ளது.
இதை பயன்படுத்தி நித்யானந்தா சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் தன்னை மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். இந்நிலையில் 293-வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்று கொண்டுள்ளதாகவும், இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளதாகவும் அந்த பதிவுகளில் அவர் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தில் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 2019-ம் ஆண்டு அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் நித்யானந்தா தற்போது தன்னை மதுரை ஆதீனம் என அறிவித்து கொண்டதோடு, பதவி ஏற்று கொண்டதாகவும் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் அருணகிரி நாதருடன் தான் இருக்கும் பழைய படத்தையும் சேர்த்து பதிவிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கு- சசிதரூர் விடுதலை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X