search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் மக்களையும், பொருட்களையும் புறக்கணியுங்கள் - மேகாலயா கவர்னரின் கருத்தால் சர்ச்சை
    X

    காஷ்மீர் மக்களையும், பொருட்களையும் புறக்கணியுங்கள் - மேகாலயா கவர்னரின் கருத்தால் சர்ச்சை

    காஷ்மீர் மக்களையும், பொருட்களையும் புறக்கணியுங்கள் என மேகாலயா கவர்னர் ததாகத ராய் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MeghalayaGovernor #TathagathaRoy #PulwamaAttack
    ஷில்லாங்:

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து மேகாலயா கவர்னர் ததாகத ராய் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார். இந்து, சமூக அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் முன்னாள் ராணுவ அதிகாரியான அவர் அதில், “2 ஆண்டுகளுக்கு காஷ்மீருக்கு யாரும் செல்லாதீர்கள், அமர்நாத் செல்ல வேண்டாம், கம்பளம் உள்ளிட்ட காஷ்மீர் பொருட்களை வாங்க வேண்டாம், குளிர்காலத்தில் காஷ்மீர் வியாபாரிகள் விற்கும் எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம். நான் இதை ஒப்புக்கொள்வதில் விருப்பம் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி, மத்திய அரசு மேகாலயா கவர்னரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா கூறும்போது, “இதுபோன்ற மதவெறி தான் காஷ்மீரை பள்ளத்தில் தள்ளியுள்ளது. ததாகத ராயின் கருத்தை நீங்கள் ஏற்பதாக இருந்தால், நீங்கள் ஏன் எங்கள் நதிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதையும் நிறுத்தக்கூடாது? அவரைப் போன்ற மக்களுக்கு காஷ்மீர் வேண்டும், ஆனால் காஷ்மீர் மக்கள் இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×