search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பீகாரில் ஊர்க்காவல் படை வீரர் கார் ஏற்றி கொலை- மது கடத்தலை தடுத்தபோது பயங்கரம்

    பீகார் மாநிலத்தில் மது கடத்தலை தடுத்த ஊர்க்காவல் படை வீரர் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது. #HomeGuardKilled
    நவாடா:

    பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக பல்வேறு பகுதிகளில் மது விற்பனை நடைபெறுகிறது. இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கலால்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலம் நவடா மாவட்டத்திற்கு வாகனங்களில் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக கலால்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலால்துறை போலீசார் மற்றும்  ஊர்காவல் படை வீரர்கள் நவடா நகர காவல் எல்லைக்குட்பட்ட சத்பாவனா ரவுண்டானா அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



    அப்போது வேகமாக வந்த ஒரு வாகனத்தை சோதனையிடுவதற்காக போலீசார் கை காட்டியபோது, அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர், கை காட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைலாஷ் சவுத்ரி (58) மீது இடித்துவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். இதில் பலத்த காயமடைந்த கைலாஷ் சவுத்ரி, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சம்பவம் நடந்த பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின்போது, மற்றொரு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. #HomeGuardKilled
    Next Story
    ×