search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லால்பகதூர் சாஸ்திரி மரணம் குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும்- மகன் கோரிக்கை
    X

    லால்பகதூர் சாஸ்திரி மரணம் குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும்- மகன் கோரிக்கை

    மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவரது மகன் கோரிக்கை வைத்துள்ளார். #LalBahadurShastri #AnilShastri
    சண்டிகார்:

    மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி எழுதப்பட்ட ‘லால்பகதூர் சாஸ்திரி: லெசன்ஸ் இன் லீடர்சிப்’ என்னும் ஆங்கிலப்புத்தகம், பஞ்சாபி மொழியில் நேற்று வெளியிடப்பட்டது. சண்டிகாரில் நடந்த இதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லால்பகதூர் சாஸ்திரியின் மகனும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அனில் சாஸ்திரி கூறியதாவது:-

    எனது தந்தையின் மர்ம மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவருடைய மகன் என்கிற முறையில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதுபற்றி ஆய்வு செய்ய 1977-ம் ஆண்டு ராஜ்நாரயண் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையையும் மத்திய அரசு வெளியிடும்படி வேண்டுகிறேன். பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த கோரிக்கையை வைத்தது. ஆனாலும் அவர்கள் பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதைச் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேருவின் மறைவுக்கு பிறகு பிரதமராக பதவி வகித்தவர் லால்பகதூர் சாஸ்திரி, 1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி சோவியத் ரஷியாவில், பாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். தாஷ்கண்ட் நகரில் தங்கியிருந்தபோது மறுநாள் திடீரென மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பில் இறந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவருடைய குடும்பத்தினர் இதில் அமெரிக்காவின் சதிவேலை இருக்கலாம் என்று குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.  #LalBahadurShastri #AnilShastri
    Next Story
    ×