search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. தேர்வு: தமிழ் பாடம் உள்பட சில தேர்வின் தேதிகள் மாற்றம்
    X

    சி.பி.எஸ்.இ. தேர்வு: தமிழ் பாடம் உள்பட சில தேர்வின் தேதிகள் மாற்றம்

    சி.பி.எஸ்.இ. தேர்வில் தமிழ் உள்பட சில பாடங்களின் தேர்வுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலை முன்னிட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    மத்திய அரசின் மூலம் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் சி.பி.எஸ்.இ. தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வருடத்திற்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பிற்கான இறுதித் தேர்வின் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 4-ந்தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை பஞ்சாப், கோவா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் சில பாடங்களின் தேர்வு தேதிகள் தள்ளிப் போகியுள்ளது.

    அதன்படி பத்தாம் வகுப்பின் தமிழ் பாடத்தேர்வு மார்ச் 10-ந்தேதி நடப்பதாக இருந்தது. அந்த தேர்வு 8 நாள் கழித்து 18-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குருங் மொழித் தேர்வு மார்ச் 23-ந்தேதிக்குப் பதில் மார்ச் 10-ந்தேதி நடைபெறும் எனவும், என்.சி.சி. தேர்வு மார்ச் 15-ந்தேதிக்குப் பதில் 23-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    12-ம் வகுப்புக்கான தேர்வில் உடற்கல்விக்கான தேர்வு ஏப்ரல் 10-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்கும், சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 20-ந்தேதிக்கும், திரையரங்கு ஆய்வு தேர்வு (Theatre Studies paper) ஏப்ரல் 20-ந்தேதிக்குப் பதில் ஏப்ரல் 10-ந்தேதியும், தங்குல் மொழிப்பாட தேர்வு மற்றும் உணவு சேவை தாள் தேர்வு (Food Service paper) ஏப்ரல் 29-ந்தேதிக்குப்பதில் ஏப்ரல் 26-ந்தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உயிரியல் தேர்வுக்கும், இணை நுழைவுத்தேர்வு 2017-ற்கும் இடையில் குறுகிய இடைவெளிதான் உள்ளது. இதனால் தேர்வின் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், சி.பி.எஸ்.இ. தேர்வில் இதுகுறித்து மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்தியா முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வையும், 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வையும் எழுத இருக்கிறார்கள்.
    Next Story
    ×