என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அதிமுக எம்.பி-க்களிடம் விசாரித்தார் பிரதமர் மோடி
Byமாலை மலர்24 Nov 2016 12:36 PM GMT (Updated: 24 Nov 2016 12:36 PM GMT)
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அதிமுக எம்.பி-க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.
புதுடெல்லி:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகின்றார். முதலமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் அப்பல்லோ சென்று விசாரித்து வந்தனர்.
அதேபோல் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் அமித் ஷா, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரும் அப்பல்லோ வந்து மருத்துவர்களிடம் விசாரித்து சென்றனர். இதனையடுத்து, பிரதமர் மோடி முதலமைச்சரை நேரில் விசாரிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அதிமுக எம்.பி-க்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்.பி-க்கள் பிரதமரை சந்தித்தனர். அப்போது, முதலமைச்சர் உடல் நலம் பெற்று வருதாக அதிமுக எம்பிக்கள் தெரிவித்தனர்.
அதிமுக எம்.பி-க்கள் நவநீத கிருஷ்ணன், மைத்ரேயன் ஆகியோரிடம் முதல்வர் குறித்து பிரதமர் நலம் விசாரித்ததாக தெரிகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் கொண்டவர் என்று பிரதமர் மோடி கூறியதாக அதிமுக எம்.பி-க்கள் தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகின்றார். முதலமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் அப்பல்லோ சென்று விசாரித்து வந்தனர்.
அதேபோல் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் அமித் ஷா, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரும் அப்பல்லோ வந்து மருத்துவர்களிடம் விசாரித்து சென்றனர். இதனையடுத்து, பிரதமர் மோடி முதலமைச்சரை நேரில் விசாரிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அதிமுக எம்.பி-க்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்.பி-க்கள் பிரதமரை சந்தித்தனர். அப்போது, முதலமைச்சர் உடல் நலம் பெற்று வருதாக அதிமுக எம்பிக்கள் தெரிவித்தனர்.
அதிமுக எம்.பி-க்கள் நவநீத கிருஷ்ணன், மைத்ரேயன் ஆகியோரிடம் முதல்வர் குறித்து பிரதமர் நலம் விசாரித்ததாக தெரிகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் கொண்டவர் என்று பிரதமர் மோடி கூறியதாக அதிமுக எம்.பி-க்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X