என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு பிரச்சினை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
Byமாலை மலர்14 Nov 2016 7:46 PM GMT (Updated: 14 Nov 2016 7:46 PM GMT)
ரூபாய் நோட்டு பிரச்சினையை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எம்.பி-க்கள் வலியுறுத்தினர்.
புதுடெல்லி:
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவ.16) தொடங்க உள்ளது.
கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் மூத்த எம்.பி.க்கள், பாராளுமன்ற குழு தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது வரும் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமான வழியில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுமித்ரா மகாஜன் கூறுகையில், ரூபாய் நோட்டு பிரச்சினை, காஷ்மீர் வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. விவாதம் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்று ஒவ்வொருவரும் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் வன்முறை, சர்ஜிக்கல் தாக்குதல், ஓ.ஆர்.ஓ.பி மற்றும் அரசின் பாகிஸ்தான் கொள்கை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவ.16) தொடங்க உள்ளது.
கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் மூத்த எம்.பி.க்கள், பாராளுமன்ற குழு தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது வரும் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமான வழியில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுமித்ரா மகாஜன் கூறுகையில், ரூபாய் நோட்டு பிரச்சினை, காஷ்மீர் வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. விவாதம் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்று ஒவ்வொருவரும் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் வன்முறை, சர்ஜிக்கல் தாக்குதல், ஓ.ஆர்.ஓ.பி மற்றும் அரசின் பாகிஸ்தான் கொள்கை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X