search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அருவியில் குளித்த பெண்களிடம் அத்துமீறிய 2 போலீஸ் அதிகாரிகள் கைது
    X

    அருவியில் குளித்த பெண்களிடம் அத்துமீறிய 2 போலீஸ் அதிகாரிகள் கைது

    • கொச்சி அருகே உள்ள பிறவம் ஏரிக்கால் அருவியில் தற்போது அதிகளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.
    • ராமமங்கலம் போலீசார், பெண்களிடம் அத்துமீறிய 2 போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான அருவிகள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன. அங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கொச்சி அருகே உள்ள பிறவம் ஏரிக்கால் அருவியில் தற்போது அதிகளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. இதனால் அந்த அருவிக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். சம்பவத்தன்று அந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மூவாட்டுப்புழா போலீஸ் நிலைய அதிகாரிகள் 2 பேர், அருவியில் குளித்த பெண்களிடம் அநாகரிகமாக நடந்துள்ளனர். மேலும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரிகளின் இந்த அத்துமீறல் குறித்து ராமமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அங்கு சென்ற ராமமங்கலம் போலீசார், பெண்களிடம் அத்துமீறிய 2 போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்தனர். அருவியில் குளித்த பெண்களிடம் போலீசார் அத்துமீறிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×