search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    எரிபொருள் தட்டுப்பாடா? உண்மை நிலையை விளக்கிய மத்திய அரசு
    X

    எரிபொருள் தட்டுப்பாடா? உண்மை நிலையை விளக்கிய மத்திய அரசு

    • ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.
    • பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதிய அளவில் உள்ளது.

    எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தகவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவைக்கு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    பெட்ரோலிய அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில தினங்களாக நாட்டின் சில பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்ததால், தாமதத்திற்கு வழிவகுத்தது. மேலும், வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் அதிகமானது. இது, எண்ணெய் நிறுவனங்களின் விநியோக கட்டுப்பாடுகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்தது.

    எனினும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதிய அளவில் உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தேவை அதிகரித்திருப்பதால், உள்ளூர் மட்டத்தில் சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

    எண்ணெய் விநியோக நிறுவனங்கள் இந்த கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை உறுதி செய்கின்றன. அத்துடன் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளன.

    சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசலின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். இந்த மாதத்தின் முதல் பாதியில், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த மாநிலங்கள், தனியார் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குச் சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் அதிக அளவில் சப்ளை செய்யப்படும் மாநிலங்கள் ஆகும். அதாவது, டெர்மினல்கள் மற்றும் டெப்போக்களிலிருந்து அதிக தூரத்தில் இந்த மாநிலங்கள் உள்ளன.

    இவ்வாறு பெட்ரோலிய அமைச்சகம் கூறி உள்ளது.

    Next Story
    ×