என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறும் எஸ்.எம்.எஸ். - உண்மை இதுதான்
Byமாலை மலர்13 Oct 2021 5:23 AM GMT (Updated: 13 Oct 2021 5:23 AM GMT)
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் போலி செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகும் தகவலில் பாரத ஸ்டேட் வங்கி, ஆவணங்களை சரியாக இணைக்காத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதாக கூறப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ். மூலம் வலம்வரும் இந்த குறுந்தகவலில், வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதால் நெட் பேங்கிங் மூலம் ஆவணங்களை இணைக்க வலியுறுத்தும் தகவல் இடம்பெற்று இருக்கிறது. வைரல் குறுந்தகவல் பற்றிய இணைய தேடல்களில், இவ்வாறு எந்த நடவடிக்கையையும் பாரத ஸ்டேட் வங்கி எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் மத்திய அரசு நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டிலும் வைரல் குறுந்தகவலை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கை முடக்கவில்லை என உறுதியாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X