search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
    • பருவ மழைபோல் மேக மூட்டத்துடன் மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    திருவள்ளூர்:

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று காலை திடீரென பலத்த மழை கொட்டியது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பருவ மழைபோல் மேக மூட்டத்துடன் மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இன்று காலையும் சாரல் மழையாக நீடித்தது.

    இதனால் குளிர்ச்சியான ரம்யமான சூழல் ஏற்பட்டது. வெப்பத்தின் தாக்கம் மேலும் குறைந்தது. மழைகாலம் போல் மாறியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டியது. திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக பள்ளிப்பட்டில் 30 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டர்) வருமாறு:-

    திருவள்ளூர்-20

    ஊத்துக்கோட்டை-23.

    இதே போல் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்தது.

    காஞ்சிபுரத்தில் இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜா பாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இடியுடன் மழை வெளுத்து வாங்கியது.

    மாமல்லபுரத்தில் நள்ளிரவில் இருந்து இன்று காலை 9மணி வரை கனமழை பெய்தது., பலத்த மழை காரனமாக, கிருஷ்ணர் மண்டபம் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதேபோல் ஐந்துரதம் நுழைவு வாயில், கலங்கரை விளக்கம் சாலை, கடற்கரை சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சுற்றுலா பயணிகள் சிறமம் அடைந்தனர்.

    கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகாலையில் மாமல்லபுரம் வந்த வெளிமாநில சுற்றுலா பயணிகள், அவர்கள் வந்த பஸ்களிலேயே முடங்கினர். பின்னர் மழை நின்றதும் அவர்கள் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து சென்றனர்.

    Next Story
    ×