என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மிஸ்டு காலால் பழக்கம்- காதலிக்க மறுத்த மாணவியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர்
- பீர்பாட்டில் குத்தில் பலத்த காயம் அடைந்த மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விசாரணையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் பீர்பாட்டிலால் அவரை குத்தியதாக ஐயப்பன் தெரிவித்து உள்ளார்.
அம்பத்தூர்:
ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி நர்சிங் படித்து வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் அவரது தோழி ஒருவரை அழைத்த போது நம்பர் மாறுதலாகி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கேண்டினில் வேலைபார்க்கும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த ஐயப்பன் (23) என்பவருக்கு சென்றது.
இதனால் மாணவிக்கும் ஐயப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தனர்.
இந்தநிலையில் ஐயப்பன் திடீரென அந்த மாணவியை காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி வெங்கடாபுரம் அருகே மாணவி நடந்துசென்றார். அப்போது அங்கு வந்த ஐயப்பன் மீண்டும் மாணவியிடம் காதலை ஏற்குமாறு கூறி தகராறில் ஈடுபட்டார். இதனை மாணவி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் பீர்பாட்டிலை உடைத்து மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து கீழே விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றபொது மக்கள் ஐயப்பனை மடக்கி பிடித்து அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீர்பாட்டில் குத்தில் பலத்த காயம் அடைந்த மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் பீர்பாட்டிலால் அவரை குத்தியதாக ஐயப்பன் தெரிவித்து உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்