search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் என்ஜினீயர் பலி- அண்ணா சாலை கட்டிட ஒப்பந்ததாரர் கைது
    X

    பெண் என்ஜினீயர் பலி- அண்ணா சாலை கட்டிட ஒப்பந்ததாரர் கைது

    • கட்டிடத்தை இடிக்கும் போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இடித்ததால் சாலையோரம் நடந்து சென்றவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரர் ஜாகீர் உசேன், பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் பழமையான கட்டிடத்தை இடிக்கும் போது பெண் என்ஜினீயர் பத்மபிரியா இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

    கட்டிடத்தை இடிக்கும் போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இடித்ததால் சாலையோரம் நடந்து சென்றவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரர் ஜாகீர் உசேன், பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். கட்டிடத்தை இடிக்க ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர் அப்துல்ரகுமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×