search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கழுக்குன்றம் அருகே தொழிலாளி மர்ம மரணம்
    X

    திருக்கழுக்குன்றம் அருகே தொழிலாளி மர்ம மரணம்

    • சதுரங்கபட்டினம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் சம்பத் மர்மமாக இறந்து கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ரத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது50). கல்பாக்கம் நகரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் சம்பத் மர்மமாக இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பத்தை மர்மநபர்கள் அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×