search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
    X

    பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

    • மாணவன் உடலை கைப்பற்றிய போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள சின்னமுட்டில் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் அருண் பல்லவ் (வயது 19). இவர் தேனி மாவட்டம் குள்ளப்புரத்தில் உள்ள தனியார் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியில் விடுதியில் தங்கி 2ம் ஆண்டு இளநிலை பட்டபடிப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி அருண் பல்லவ்வை அவரது நண்பர்கள் மீட்டு வைகை அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவனின் தந்தை சந்திரசேகர் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில் தனது மகன் இறந்ததாக கூறப்படும் கிணற்றில் 20 அடி ஆழம் மட்டுமே உள்ளது என்றும் அதில் 7 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது என்றும் தனது மகனுக்கு நீச்சல் நன்றாக தெரியும். அவ்வாறு உள்ள நிலையில் எப்படி நீரில் மூழ்கி இறந்திருக்க முடியும்? எனவே எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. கல்லூரி நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் சக மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அதன் பேரில் மாணவன் உடலை கைப்பற்றிய போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண் பல்லவ் உயிரிழந்த கிணறு மற்றும் சக மாணவர்கள் ஆகியோரிடம் மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை மேற்கொண்டார். தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×