search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கிய 2 வாலிபர்கள் வசித்த பகுதியில் போலீசார் விசாரணை
    X
    மாணிக்கம்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கிய 2 வாலிபர்கள் வசித்த பகுதியில் போலீசார் விசாரணை

    • ஒரு காம்பவுண்டு வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை .
    • காம்பவுண்ட் வீட்டில் மொத்தம் 4 வீடுகள் வாடகைக்கு உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு காம்பவுண்டு வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதில் 2 வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சென்று ஈரோடு ஆர்.என். புதூரில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டைரிகள், சிம்கார்டு, வங்கி பாஸ்புக் உள்ள ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்ட போலீசார் அந்த குடும்பத்தினர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அருகில் வசிக்கும் பக்கத்து வீட்டுகாரர்களிடம் அவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். காம்பவுண்ட் வீட்டில் மொத்தம் 4 வீடுகள் வாடகைக்கு உள்ளன.

    அங்கு வசிபவர்களிடம் எத்தனை வருடமாக இங்கு தங்கி உள்ளனர். சந்தேகப்படும் படி நபர்கள் யாரேனும் வந்து சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நடைபெறுகிறது.

    Next Story
    ×