search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு
    X

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி எரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி எரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 4-ம் தேதி பூண்டி ஏரி சென்றடைந்தது. முதலில் வினாடிக்கு 20 கன அடி வீதம் வந்து சேர்ந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரத்து 450 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்தத் தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 320 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. வரும் நாட்களில் கிருஷ்ணா நீரின் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 26.18 அடியாக பதிவானது. 1.008 டி.எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×