என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் தனியார் பள்ளியில் குழந்தைகள்நல ஆணையர் குழுவினர் நேரில் விசாரணை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சின்னசேலம் தனியார் பள்ளியில் குழந்தைகள்நல ஆணையர் குழுவினர் நேரில் விசாரணை

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இதுதவிர தடயவியல் குழுவினரும் பள்ளிக்கு நேரில் விசாரணையை நடத்தி உள்ளனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

    இதுபற்றி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதவிர தடயவியல் குழுவினரும் பள்ளிக்கு நேரில் விசாரணையை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் மாணவி இறந்த பள்ளிக்கு சென்றனர். அங்கு உள்ள காவலாளி மற்றும் டிரைவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்தினர்.

    அதன்பின்னர் மாணவி தங்கி இருந்த விடுதி அறை, மாடியில் இருந்து குதித்த இடம் ஆகியவற்றையும் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    Next Story
    ×