search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுங்க வைக்கும் உறைபனி- ஊட்டியில் 1.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
    X

    அவலாஞ்சியில் உறைபனியால் உருவான பனிக்கட்டி.

    நடுங்க வைக்கும் உறைபனி- ஊட்டியில் 1.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

    • ஊட்டியில் கொட்டி வரும் தொடா் உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் சுவர்ட்டர் அணிந்தபடியே சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலை நேரத்தில் உறைபனி மற்றும் நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    ஊட்டி நகர பகுதிகளில் இன்று காலை அதிகபட்சமாக 23.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 1.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.

    உதகை அருகில் உள்ள அவலாஞ்சி நீா்ப்பிடிப்பு பகுதியிலும் கடும் உறைபனி நிலவி உள்ளது. இதனால் இங்குள்ள தோட்டங்களில் வெள்ளைக் கம்பளம் போா்த்தியது போல ஐஸ் கட்டிகள் காணப்பட்டன.

    உதகை தாவரவியல் பூங்கா புல்வெளி, குதிரை பந்தய மைதானம் புல்வெளி, மரம், செடி, கொடிகளிலும் உறைபனி படர்ந்திருந்தது.

    கோத்தகிரி, மஞ்சூா், கொலக்கம்பை, கிரேக்மோா், நான்சச் போன்ற பகுதிகளிலும் நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    பள்ளத்தாக்கு பகுதிகளிலும் காலை நேரத்தில் சில இடங்களில் உறைபனியும், சில இடங்களில் நீா்ப்பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

    உறைபனியில் இருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்போர் சுவர்ட்டர் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.

    பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் சுவர்ட்டர் அணிந்தபடியே சென்றனர்.

    ஊட்டியில் கொட்டி வரும் தொடா் உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×