search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை- மகள் இறந்த நாளில் பரிதாபம்
    X

    இரணியல் அருகே தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை- மகள் இறந்த நாளில் பரிதாபம்

    • இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • பழனிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே கக்கோட்டுதலை தெக்கன் திருவிளை பகுதியை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 50). குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளராக இருந்தார்.

    கக்கோட்டுதலை ஊராட்சி கவுன்சிலர் ஆகவும் இருந்து வந்தார். இவரது மனைவி மீனாதேவி. இவர்களுக்கு ஒரு மகனும், ஆஷிகா (17) என்ற மகளும் இருந்தனர். ஆஷிகா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு பழனிக்குமார் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் இன்று ஆஷிகாவின் நினைவு தினமாகும். நேற்று இரவு பழனிக்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில் இன்று காலை வீட்டின் உத்திரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கே திரண்டனர்.

    இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பழனிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனிக்குமார் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் மகள் இறந்த துக்கத்தில் அவரும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட பழனிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    மகள் இறந்த தினத்தில் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×