search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் அருகே வீடு இடிந்து வாய் பேச முடியாத 2 மூதாட்டிகள் பலி
    X

    திருப்பத்தூர் அருகே வீடு இடிந்து வாய் பேச முடியாத 2 மூதாட்டிகள் பலி

    • கடந்த வாரம் தொடர் மழை காரணமாக குடிசை வீட்டின் முன் சுவர்கள் ஈரமாக இருந்து வந்தது.
    • இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த மண்டலநாயனகுண்டா ஊராட்சி மேல் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மா (வயது 102).

    இவரது மகள்கள் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் நாகம்மாள் (வயது72), சுந்தரி (வயது 65), 3, பேரும் அவர்களுக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

    கடந்த வாரம் தொடர் மழை காரணமாக குடிசை வீட்டின் முன் சுவர்கள் ஈரமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் நாகம்மாள் மற்றும் சுந்தரி, மீது சுவர்கள் விழுந்து அவர்கள் 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    அதே குடிசை வீட்டில் சமையல் அறையில் தங்கியிருந்த 102 வயது மூதாட்டி சின்னம்மா உயிர் பிழைத்தார், அதிகாலை அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தனர். உடனடியாக ஊராட்சி மன்றத் தலைவர் டி.ஜி.முருகனுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக மீட்பு குழுவினருடன் இடிந்து விழுந்த சுவர்களை அப்புறப்படுத்தி இருவரின் உடல்களை கைப்பற்றி வெளியே எடுத்தனர். இறந்தவரின் உறவினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் குடிசை வீட்டிற்கு புதிய வீடு கேட்டு 3, முறை பதிவு செய்தும் வீடு வழங்காததால் இந்த சம்பவம் நடந்திருக்கிறது என கூறி கந்திலி ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலர் மீது குறை கூறி மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் சமாதானம் செய்தார். தகவலறிந்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவர் இடிந்து காது கேளாத வாய் பேசா முடியாத 2 மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×