search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அயனாவரம் மலர் டிரஸ்ட் சார்பில் தூய்மை பணியாளர்கள் 300 பேருக்கு நலத்திட்ட உதவி
    X

    அயனாவரம் மலர் டிரஸ்ட் சார்பில் தூய்மை பணியாளர்கள் 300 பேருக்கு நலத்திட்ட உதவி

    • தூய்மை பணியாளர்களால் தான் இன்று நாம் ஒரு சுகாதாரமான வாழ்வை வாழ்கின்றோம். அவர்களின் பணி போற்றத்தக்கது. பாராட்டத்தக்கது.
    • மலர் டிரஸ்ட் ஆண்டுதோறும் எங்களை போன்ற தொழிலாளிகளை கவுரவிப்பது உற்சாகமாக உள்ளது.

    வில்லிவாக்கம்:

    அயனாவரம் மலர் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தூய்மை பணியாளர்கள், சாலை பணியாளர்கள், குடிநீர் வாரிய பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு புத்தாடை, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி நேற்று அயனாவரம் மார்க்கெட்டில் உள்ள நாடார் சங்க பள்ளி அரங்கில் தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனருமான வே.வாசு தலைமையில் தூய்மை பணியாளர்கள், சாலை பணியாளர்கள், குடிநீர் வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு புத்தாடை, நலத்திட்ட உதவி மற்றும் மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மலர் டிரஸ்ட் நிறுவனர் வே.வாசு பேசுகையில்,

    தூய்மை பணியாளர்களால் தான் இன்று நாம் ஒரு சுகாதாரமான வாழ்வை வாழ்கின்றோம். அவர்களின் பணி போற்றத்தக்கது. பாராட்டத்தக்கது. எனவே தான் ஆண்டுதோறும் அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி இதேபோன்று தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றார்.

    நலத்திட்ட உதவி பெற்றுக்கொண்ட பெண் தூய்மை பணியாளர் கூறுகையில், நாங்கள் ரோட்டில் உள்ள குப்பைகளை பெருக்குவதாலும் தூய்மை பணியாளர் என்பதாலும் எங்களை எல்லோரும் ஒருவிதமாக பார்க்கும் நேரத்தில் மலர் டிரஸ்ட் ஆண்டுதோறும் எங்களை போன்ற தொழிலாளிகளை கவுரவிப்பது எங்களை மேலும் ஊக்குவிப்பதோடு நாங்கள் மனதார இந்த பணியை செய்ய இன்னும் எங்களுக்கு உற்சாகமாக உள்ளது.

    எங்களை அழைத்து அமர வைத்து எங்களை கவுரவப்படுத்தும் மலர் டிரஸ்ட் நிறுவனர் வாசு அவர்களுக்கு தூய்மை பணியாளர்கள் சார்பாக நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 97 - வது வட்ட மாமன்ற உறுப்பினர் லதா வாசு, மலர் டிரஸ்ட் நிர்வாகிகள் எச்.மனோகர் ஜெயின், ஜி.ராதா கிருஷ்ணன், ஆர்.முரளி பாபு, கே. சேகர்,ஆர்.உதய சேகர், வி.சுரேஷ், எஸ்.மோகன், எஸ்.தங்கவேல் எம்.பசுபதி, டி.யுவராஜ், எஸ்.வி.ஏ.பிரபா கரன், பி.தெய்வசிகாமணி, கே.ஜெயசங்கர் உட்பட பகுதி குடியிருப்பு சங்க நிர்வாகிகள், பொது நல சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×