search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அங்கன்வாடி ஊழியர் தலை நசுங்கி பலி

    ரெட்டியார்பாளையத்தில் மொபட் மீது பஸ் மோதியதில் அங்கன்வாடி ஊழியர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்திைரயர் பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    ராஜலட்சுமி எல்லை பிள்ளை சாவடி பகுதியில் உள்ள அங்கன்வாடியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். 

    வழக்கம் போல் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு வந்தார்.

    ெரட்டியார் பாளையம் கம்பன் நகர் அருகே வந்த போது முன்னாள் சென்ற தனியார் பஸ்சை ராஜலட்சுமி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. 

    அப்போது பஸ் உரசியதில் ராஜலட்சுமி மொபட்டோடு தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் முன்பக்க டயர் ராஜலட்சுமியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி துடிதுடித்து இறந்து போனார். 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    புதுவை- விழுப்புரம் சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. 

    வளவனூரை சேர்ந்த செல்வகணபதி எம்.பி.யின் உறவினர் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோர் கண்டெய்னர் லாரி மோதி உடல் நசுங்கி இறந்து போனார்கள். 

    அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தில் தேர்வு எழுத மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர் பல்கலைக்கழக பஸ் மோதி படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×