என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிரதமரின் லட்சியங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்- தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்
Byமாலை மலர்28 May 2022 9:03 AM GMT (Updated: 28 May 2022 9:03 AM GMT)
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல் பிரதமரின் லட்சியங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.
2-வது நாளான திருச்சி இளங்குமார் சம்பத் மனிதநேயம் குறித்து விளக்கினார். வரலாறு, வளர்ச்சி குறித்து மாநில தலைவர் சாமிநாதன் பேசினர்.
பிரதமரின் நலத்திட்டங்கள் குறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். தொடர்ந்து தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தமிழக பா.ஜனதா செயலாளர் சூர்யா, வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கோபாலன் கடையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடந்த முதல்நாள் தொடக்கவிழாவுக்கு மாநில தலைவர் சாமிநாதன் வரவேற்றார்.
ஒழுங்கு நடவடிக்கை குழு பொறுப்பாளரும், முகாமின் தலைவருமான இளங்கோவன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேசும்போது, பயிற்சி முகாம் அனைத்து நிர்வாகிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கட்சியை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அனைவருக்கும் வங்கி கணக்கு, மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா, செல்வமகள், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, முத்ரா வங்கி கடன் திட்டம், இலவச எரிவாயு அடுப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், விவசாயிகளுக்கு நேரடி மானிய திட்டம், 18ஆயிரத்து 500 கிராமங்களுக்கு மின்வசதி திட்டம், விரைவு சரக்கு போக்குவரத்து உட்பட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமரின் லட்சியங்களையும், திட்டங்களையும் உணர்வுப்பூர்வமாக நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X