என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓச்சேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் சாவு
Byமாலை மலர்17 May 2022 9:41 AM GMT (Updated: 17 May 2022 9:41 AM GMT)
ஓச்சேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ஆயர்பாடி கிராமம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன்.இவர் தச்சு வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் சூர்யா (எ) முகேஷ் (22). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சதிஷ் (26).என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் நண்பர்கள் 3 பேருடன் ஓச்சேரிக்கு சென்றுள்ளார்.
அப்போது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் இருந்து கல் மீது ஆட்டோ ஏறியதில் தாறுமாறாக ஓடி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஓச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கிருந்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை பாண்டுரங்கன் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் மோகன், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X