search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சோளிங்கர் கோவில் தேரோட்ட விழாவில் மூதாட்டியிடம் செயின் பறித்த 2 பெண்கள் கைது

    சோளிங்கர் கோவில் தேரோட்ட விழாவில் மூதாட்டியிடம் c 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நேற்று நடந்தது. 

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்திருவிழாவின்போது சுப்பாராவ் தெருவை சேர்ந்தராணி கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை 2 பெண்கள் பறித் துள்ளனர்.

    உடனே ராணி கூச்சலிட்டுள்ளார் . அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்ற 2 பெண்களை கையும் களவுமாக பிடித்தனர். 

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி சமயபுரம் அருகே உள்ள மணச்சநல்லூர் வாய்க்கால் மேட்டு தெரு பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது 32 ) , பொன்னாத்தா என்கிற கவிதா ( 35 ) என்பது தெரியவந்தது . 

    இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோவில் திருவிழாவை குறி வைத்து பெண்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×