search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிப்காட் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

    சிப்காட் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் அருகே உள்ள புளியந்தாங்கல் கிராமம் பஜனைகள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (50) பந்தல் அமைப்பாளர். 

    இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் குடி போதையில் சிப்காட் அண்ணா நகர் 5வது தெருவைச் சேர்ந்த ஆண்டனி (34) என்பவரை குடிபோதையில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆன்டனி நேற்று மாலை சிப்காட் போலீசில் புகார் செய்தார். 

    அதன்பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பார்த்தசாரதி சப்-இன்ஸ்பெக்டர் தாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×