search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தார் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
    X
    தார் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    சாலை அமைக்கும் பணி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

    பூரணாங்குப்பம் பகுதியில் 4 புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை வசதியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ெதாடங்கி வைத்தார்
    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பூரணாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ரோஜா நகர், சாமியார் நகர், கோவிந்தம்மாள் நகர், கந்தசாமி நகர்ஆகிய பகுதிக்கு தார் சாலை மற்றும் கருங்கல் சாலைகள் ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பணி ெதாடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுவை சபாநாயகரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான  ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். 
    இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், பா.ஜனதா நிர்வாகிகள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, சக்திபாலன், சக்திவேல், லட்சுமிகாந்தன், தட்சிணாமூர்த்தி, மணி, பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள் ராஜகுரு, தண்டபாணி, கோபால், தமிழ், புத்துப்பட்டான், ஆனந்தன், பிரபாகர், ஜீவா, அப்பு, அய்யனார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×