search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கிய காட்சி.
    X
    பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கிய காட்சி.

    அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்

    ஏனாம் தொகுதியில்அ ரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
    புதுச்சேரி:

    ஏனாம் பிராந்தியத்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சபாநாயகர்  ஏம்பலம் செல்வம் சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    இதனை தொடர்ந்து ஏனாம் தொகுதியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொல்ல பள்ளி சீனிவாஸ் அசோக் 
    எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர் மற்றும் விதவைகள் 158 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். 

    இதைத் தொடர்ந்து வேளாண் துறை சார்பில் 40 விவசாயிகளுக்கு இலவச கொசுவலை வழங்கப்பட்டது.

    விழாவில் ஏனாம் நிர்வாகி அமன் ஷர்மா,  எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், அசோக்பாபு, வேளாண் துணை இயக்குனர் கணேசன், வேளாண் அதிகாரி ஜோகிராஜு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி-கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×