என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம்

    அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட துணை ஆட்சியர் பங்கேற்றார்.
    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் பாரதி தலைமை தாங்கினார். ஆசிரியை பரமேஸ்வரி வரவேற்றார். கூட்ட நிகழ்ச்சிகளை ஆசிரியை மீனா தொகுத்து வழங்கினார். 

    கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட துணை ஆட்சியர் சத்திய பிரசாந்த் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் பள்ளி ஆசிரியைகள் ராஜேஸ்வரி, அமுதராணி, நிர்மலா, காஞ்சனா, மீகால், ஜெயபாரதி ஆகியோர் கூட்டத்திற்கு வருகை புரிந்த பள்ளி பெற்றோர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றனர். கூட்ட முடிவில் பள்ளி உதவி தலைமையாசிரியை கேத்தரின் நன்றி கூறினார்.
    Next Story
    ×