என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திறந்தவெளி பாராக மாறிய பெருமாள் நகர்
Byமாலை மலர்16 April 2022 4:58 AM GMT (Updated: 16 April 2022 4:58 AM GMT)
சேதராப்பட்டு அருகே திறந்தவெளி பாராக மாறிய பெருமாள் நகரில் சாலையில் காலி மது பாட்டில்களை உடைத்து சமூக விரோதிகள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
சேதராப்பட்டு-திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு செல்லும் சாலையில் தமிழக பகுதியான பெருமாள் நகரில் குடியிருப்புகள் மற்றும் சிறிய தொழிற் சாலைகள் உள்ளது.
இந்த பகுதியில் சேதராப்பட்டு தொழிற்-சாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே தங்கி உள்ளனர்.
பெருமாள் நகரில் 5-க்கும் மேற்பட்ட குறுக்கு சிமெண்டு சாலைகள் உள்ளது. இந்தப் பகுதியில் மாலை 7 மணிக்கு மேல் இரவு 12 மணி வரை தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது.
சேதராப்பட்டில் பணி முடித்துவிட்டு அந்த வழியாகத்தான் பெண்கள் பாப்பான்சாவடி, ஆகாசம்பட்டு ஆகிய ஊர்களுக்கு செல்கிறார்கள்.
இதனால் அங்கு மது அருந்துபவர்களால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மது அருந்துபவர்கள் காலி மது பாட்டிலை சாலையிலேயே உடைத்து போடுகின்றனர்.
இதனால் அங்கு செல்லும் கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. போலீசார் கண்காணிப்பில் இல்லாத இந்த பகுதி என்பதால் மது மட்டுமல்லாமல் இளைஞர்கள் கஞ்சாவை புகைப்பதாகவும், போதை ஏறிய பின்னர் பலர் பிரச்சினைகள் செய்துகொள்வதும், மோதிக் கொள்வது என சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதனால் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த வழியாக வரும் வட மாநிலத் தொழிலாளர்களை சிலர் போதையில் தகாத வார்த்தையால் பேசுவதும் நடந்து வருகிறது.
எனவே ஆரோவில் மற்றும் வானூர் போலீசார் இரவு நேர ரோந்து பணியினை அந்த வழியாக தினமும் மேற்கொண்டால் அங்கு மது அருந்துபவர்கள் எண்ணிக்கை குறைவதோடு அந்த பகுதியில் அசம்பா-விதங்கள் ஏதும் நடக்காத வண்ணம் தடுக்க முடியும் என பொதுமக்களும், தனியார் தொழிற்சாலை உரிமையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X