என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ராணிபேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
ராணிபேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக் கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மது கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தால், மதுக் கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மது கூட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Next Story






