என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 321 பேருக்கு பணி நியமன ஆணை

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    அரக்கோணம்:

    தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ் நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலை வாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான முகாமை நடத்தியது. 

    இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங் மற்றும் 10-ம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை படித்தவர்களை தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்தனர். முகாமில் 321 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பணி நியனமன ஆணைகள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான ஆணைகளை வழங்கினார்.

    தொடர்ந்து முகாமில், 25 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.17 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான காசோலையினையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், அரக்கோணம் வருவாய் கோட் டாட்சியர் சிவதாஸ், நகராட்சி ஆணையாளர் லதா உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×