என் மலர்
உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகள் அமைச்சர் காந்தி வழங்கிய போது எடுத்த படம்.
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி அடையாள அட்டை பெற்ற உடனே 3 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் முன்னிலை வகித்தார். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை 373 பேருக்கு வழங்கப்பட்டது.
கலெக்டர் அறிவுரையின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 97 மாற்றுத்திறனாளிகளின் பெயர் பதிவு, 143 புதிய பயனாளிகளுக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், நகரமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






