என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பணியிடமாற்றம்- கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். 

    அதன் விவரம் வருமாறு:-

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார் ஹிந்துமதி கலவை தாலுகா அலுவலகம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரகவும், அங்கு பணியாற்றி வந்த தாசில்தார் ஜெயபிரகாஷ் அரக்கோணம் சிப்காட் பணப்பாக்கம் தொழிற்பூங்கா திட்டம் தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த காஞ்சனா வேலூர் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக (கோயில் நிலம்) நியமிக்கப்பட்டுள்ளார். 

    இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரகவும், சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த ராஜராஜசோழன் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அரக்கோணம் தாலுக்கா சிப்காட் பனப்பாக்கம் தொழிற் பூங்கா திட்டம் தனி தாசில்தார் குமரவேல் அரக்கோணம் தாலுகா மதுபான கிடங்கில் உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) காலி பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×