என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரக்கோணம் அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவர் பலி

    அரக்கோணம் அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவர் பரிமதாபமாக இறந்தார்.
    நெமிலி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சீக்கராஜ குப்பம் பகுதியை சோர்ந்தவர் ஜீவானந்தம் மகன் தோனி என்கின்ற தோனீஸ்வரன் (வயது 19). திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

    நேற்றிரவு பொன்பாடி ரெயில் நிலையம் அருகே வந்த போது காரைக்காலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் படுகாயமடைந்து தோனி பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும், இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
    Next Story
    ×